Friday, November 26, 2004

அவர்கள் சிரிக்க இவர்கள் சிந்திக்க

"டேட்டா எண்ட்ரி பண்ற பொண்ணுகிட்ட காதல் கடுதாசி குடுத்தது தப்பாப் போச்சு."


"ஏன், என்ன ஆச்சு?"



"என் டேபிள்ல மௌசுக்கும், மனசுல ஒனக்கும் இடம் கிடையாதுன்னு ஒரே போடா போட்டுட்டா"




"கார்த்தால எல்லாம் நான் சமையல் வேலையை கவனிக்கறதே இல்லை. கால் மேல கால் போட்டு செம தூக்கம் தூங்குவேன்"


"அட பரவாயில்லயே! உங்க மனைவி ஒன்னும் சொல்மாட்டாங்க?"


"ச்சே, ச்சே. நைட் ஷிஃப்ட் முடிச்சுட்டு வந்து களைப்பா இருப்பேன்னு அவளுக்கு புரியும். சாயங்காலத்துக்குள்ளயாவது சமைச்சு முடிக்காட்டிதான் திட்டுவா"




"'படிதாண்டா பத்தினி'னு அவர் சொன்னப்ப எனக்கு மொதல்ல புரியலை."


"அப்பறம்?"


"தெனமும் வீட்டுக்காரம்மா கிட்ட அடி வாங்கி வாசல் படிதாண்டா கதின்னு கிடப்பார்ன்னு போய்ப் பார்த்தப்பதான் புரிஞ்சது"



"அந்த மகளிர் சங்கத் தலைவி ஏன் ரொம்ப அப்செட்டா இருக்காங்க?"



"அதுவா, ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்னு தன் வாயாலேயே மேடைல ஒத்துக்க வேண்டியதாப் போச்சாம்"




கடவுள்: பக்தா, நீ வேண்டும் இரண்டு வரம் கேள்!


மனிதன்: சாமி, அடுத்த ஜென்மத்துலயும் என் மனைவிக்கு நல்ல கணவன் அமையணும்


கடவுள்: சரி, தந்தோம். இன்னொன்று?


மனிதன்: சாமி, அடுத்த ஜென்மத்துலயாவது எனக்கு நல்ல மனைவி அமையணும்