Friday, February 25, 2005

சத்தி விடங்கி

நேற்று கோழியர் சங்கம் வரைப் போய் வந்தேன். காதில் கேட்ட சில உரையாடல்கள் இதோ...


"
"என் கணவருக்குத் தங்கமான மனசு"

"அப்படியா?"

"ஆமாம். நேத்து கூட அன்பா 'துஷா துஷா, உன் கை தவறி விழுந்தாலும், என் தலைல பட்டதாலதான் அந்த சப்பாத்திக்கட்டை உடைஞ்சது. அழாதே'ன்னு சமாதானப்படுத்தினார்."



"உங்க கணவரோட ரொம்பநாளா குடித்தனம் நடத்தறீங்க போலருக்கே!"

"எப்படி நெல்வசாயகி கண்டுபுடிச்சீங்க?"

"வாசல்ல 'நாய் ஜாக்கிரதை'ன்னு போர்டு வெச்சுருக்கீங்களே, அதான்."


"யெஜந்தி, எல்லாப் பெண்களும் சேர்ந்து படம் எடுத்த என்னபடம் வைப்பாங்க?"

"மண்மதி"


"ஒரு வேலையுமே செய்யாம இப்படி வீட்ல மரமா ஆன மாதிரி இருக்கியே? உன் கணவர் ஒன்னும் சொல்றதில்ல?"

"மரம் என்ன மரம்! நான் புல்லே ஆனாலும் அவர் புருஷன்தானாம்"


"என்ன, உனக்கும் உன் மாமியாருக்கும் சண்டையே வராதா? அது எப்படி?"

"யோவ், நான் கோழியர் சங்க வாட்ச்Man. போ வெளில!"





கோழி என்ற ஒரு சொல் மேல்Kindஇல் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, "கழுதைகளைப் பற்றி சில உண்மைகள்" போன்று தலைப்பிட்டு ஏதேனும் அங்கதங்கள் கோழியர்ப்பதிவில் இடம்பெறலாம். தொடர்ந்து பல்லி, பூரான், வௌவால், நட்டுவாக்கிளி ஆகியவைகளைத் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் சாதக பாதகங்களைப் பற்றியும் அலசப்படும்.