tag:blogger.com,1999:blog-83980002024-03-07T10:41:53.893+05:30மேல் Kindதி.மு: பேச்சுலர்கள்
தி.பி: பேச்சிலர்கள்Unknownnoreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8398000.post-6577674638638709462019-11-19T21:48:00.001+05:302019-11-19T21:48:42.980+05:30ஆண்கள் தினம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இப்படியாக, காலங்கள் உருண்டோடின. குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்த ஆண்கள் இனம் வெட்டிச்சாய்க்கப்பட்ட பின், அவர்கள் ஆண்கள் தினம் கொண்டாடினர்.<br />
<br />
அப்பாவின் அருமை மட்டும் ஏதோ குழந்தைகளுக்கு மிகப்பெரிதானதும் புரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் Validity முடிந்த சிம் கார்டுக்கு மிஸ்ட் கால் குடுத்து என்ன பயன்?<br />
<br />
ஆண்கள் வாழ்க்கை திருக்குறள் மாதிரி. திருக்குறளுக்கு ரெண்டே வரி. ஆண்களுக்கு ரெண்டே வழி. ஒன்னு அடங்கிப் போறது. இன்னொன்னு அடங்கிப்போனமாதிரி நடந்துக்கறது. ஆண்கள் தினம் பொதுவா இப்படித்தான். Don't worry, be happy. அட்லீஸ்ட், happyயாக இருப்பது மாதிரி நடிக்கவும்.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8398000.post-15384229974541471972010-07-17T10:14:00.003+05:302010-07-17T10:17:15.711+05:30மறுபடியும்<span style="font-weight:bold;">ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய மறுபடியும் வருகிறது... மேல்Kind!<br /><br />வெகுவிரைவில்...</span>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8398000.post-83055445118950789592007-07-23T14:08:00.000+05:302007-07-23T14:13:53.136+05:30காலங்கள் ஓடுது பூங்கொடியே...காட்டு ராஜாவான சிங்கத்திடம் வேலைக்குச் சேர்ந்தது ஒரு அணில். சிங்கம் எந்த வேலையைக் கொடுத்தாலும் அதை பணிவோடு ஏற்று, சுறுசுறுப்பாக செய்து முடித்தது அந்த அணில்.<br /><br />சிங்கத்துக்கு அந்த அணிலை ரொம்பவே பிடித்துப் போனது.<br /><br />"உன் சேவையைப் பாராட்டி, நீ ஓய்வு பெறும்போது உனக்கு ஒரு வண்டி நிறைய பாதாம் கொட்டைகள் தருகிறேன்" என்று வாக்குறுதி கொடுத்தது சிங்கம்.<br /><br />அணிலுக்குத் தாங்கமுடியாத சந்தோஷம். காட்டில் இருக்கும் பிற அணில்கள், தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு பாதாம்கொட்டையைச் சுவைத்திருந்தாலே பெரிய விஷயம். ஆனால், தனக்கு ஒரு வண்டி நிறைய கிடைக்க்ப் போகிறதே என்று பிரமித்தது அது.<br /><br />அந்தக் கனவிலேயே அதன் ஒவ்வொரு நாளும் கழிந்தது. மற்ற அணில்கள் எல்லாம் மரங்களில் சுதந்திரமாக ஏறி விளையாடி, ஒவ்வொரு சீசனிலும் புதிது புதிதாக பழுக்கும் பழங்களையும் கொட்டைகளையும் சுவைத்துக் கொண்டிருக்க, அந்த அணில் மட்டும் ராஜாவின் கட்டளைகளை வேத வாக்காக ஏற்றுச் செய்து கொண்டிருந்தது.<br /><br />ஆண்டுகள் ஓடின. அணிலுக்கு வயதாகி, நகரவே முடியாத ஒரு வேளை வந்தது. தான் ஓய்வு பெறும் தருணம் வந்துவிட்டதை உணர்ந்த அது, சிங்கத்திடம் விஷயத்தைச் சொன்னது. சிங்கமும் அணிலுக்கு உரிய மரியாதை செய்து, ஒரு வண்டி நிறைய பாதாம்கொட்டைகளைக் கொடுத்து அனுப்பி வைத்தது.<br /><br />தன் வீட்டுக்கு அதை எடுத்துப் போன பிறகுதான் அணிலுக்கு ஒரு விஷயம் உறைத்தது... முதுமையின் காரணமாக அதன் பற்கள் எல்லாம் விழுந்துவிட்டிருந்தன; அதனால் ஒரே ஒரு பாதாம்கொட்டையைக் கூட சுவைக்க முடியாது. எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் வாழ்க்கை முடிந்துவிட்டதே என அணில் வருந்தியது.<br /><br /><strong>எப்போதோ கிடைக்கும் ஆதாயம், இன்றைய பசியைத் தீர்க்காது!</strong><br /><br /><span style="">பணியக மின்னஞ்சலில் வந்த ஒரு குட்டிக்கதை...சொந்த சரக்கு இல்ல.</span>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8398000.post-1174291847734178792007-03-19T14:40:00.000+05:302007-03-29T03:08:08.083+05:30மௌனம் - குறும்படம்<table xmlns="http://purl.org/atom/ns#" border="0" cellpadding="0" cellspacing="0"><tbody><tr><td>மகளிர் தினத்தன்னிக்கே இதைப் பதியணும்னு நெனச்சேன், முடியாமப் போச்சு.</td></tr><tr><td><br /><br />கூக்ள் வீடியோசில் உல்லாத்திக்கொண்டிருந்த பொழுது கிடைத்த ஒரு அருமையான குறும்படம். நீங்களும் பாருங்க...</td></tr><tr><td colspan="2"><embed flashvars="" id="VideoPlayback" src="http://video.google.com/googleplayer.swf?docId=8708318924346243326&hl=en&autoplay=1" style="width: 400px; height: 326px;" type="application/x-shockwave-flash"> </embed></td></tr><tr></tr><tr><td>Flash plug-in install ஆகி இருக்கணும்,சொல்ல மறந்துட்டேன். </td></tr></tbody></table>Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8398000.post-1157969737621462772006-09-11T15:37:00.000+05:302006-09-11T15:45:38.286+05:30'பேச்சி'லர் சூர்யா<a href="http://photos1.blogger.com/blogger/5590/239/1600/suriya_jothika.0.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/5590/239/400/suriya_jothika.0.jpg" border="0" /></a><br />ஜோதிகா ரசிகர்களுக்கு தாடி ப்ராப்திரஸ்து. சூர்யா ரசிகர்கள் ஆனந்தமும் அடையக்கடவது. 'ஜோ' ரசிகர்கள் அடுத்த ஆண்டில் இருந்து அதிகப்படியாக ஒரு 'ராக்கி' வாங்கி கட்டிக்கொள்ளவும்.<br /><br />பட வடிவமைப்பு/மேம்பாடு செய்துகொடுத்த என் பணியக கணிணி வரைகலை நிபுணர் முத்துவுக்கு ('பேச்சி'லர்தான்) நன்றி.Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8398000.post-1146248733162640192006-04-28T23:28:00.000+05:302006-04-29T00:07:30.080+05:30பதவி உயர்வு<center><br /><a href="http://www.weblogimages.com/v.p?uid=shankarkrupa&pid=461407&sid=any94gmAU5"><img src="http://www.weblogimages.com/v.p?uid=shankarkrupa&pid=461407&sid=any94gmAU5" border="0" height="200" width="300" /></a><br /></center><br />பேச்சுலர்ப் பதவியிலலிருந்து பேச்சிலராகப் பதவி உயர்வு கிடைக்க இருக்கிறது.... பதவி ஏற்பு ஏப்ரல் 30, 2006. மேல் விவரங்கள் பத்திரிக்கையில் உள்ளன.<br /><br />மின்னஞ்சலில்/நேரில் அழைப்பைப் பெற விடுபட்டவர்கள் தயவுசெய்து இதையே அப்படிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளவும். சிலப்பலப் பணிகளால் விளைந்த நேரமின்மையின் காரணமாக மின்னஞ்சலில் அழைப்பிதழ் நிறைய பேருக்கு அனுப்ப முடியாமல் போய்விட்டது. இந்த இயலாமையையும் என் நட்பு/அன்பையும் தயை கூர்ந்து தொடர்புப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />திருமணத்திற்கோ வரவேற்பு நிகழ்ச்சிக்கோ வந்தால் பெருமகிழ்ச்சியடைவேன். இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் கூட வரலாம். ;-)Unknownnoreply@blogger.com19tag:blogger.com,1999:blog-8398000.post-1145521331844667852006-04-20T13:47:00.000+05:302006-04-20T14:19:10.480+05:30திருமண அழைப்பிதழ்பள்ளியில் படிக்கும்போது இது மாதிரி நிறைய 'பத்திரிக்கைகள்' படிச்சுதான் என் அறிவு வளர்ச்சி அடைஞ்சது. சமீபத்துல என் நண்பன் ஒர்த்தன் மின்னஞ்சல்ல அனுப்பி இருந்தான்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5590/239/1600/invitation_pisaasu.1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5590/239/400/invitation_pisaasu.1.jpg" alt="" border="0" /></a>Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8398000.post-1139254756253470472006-02-07T00:27:00.000+05:302006-04-20T14:21:23.896+05:30ச்சாச்சுப்புட்டாங்ங...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5590/239/1600/P2020048.2.jpg"><img src="http://photos1.blogger.com/blogger/5590/239/1600/P2020048.2.jpg" height="400" width="500" /></a><br /><br />ஆடிய ஆட்டமென்ன...<br />பேசிய வார்த்தையென்ன...<br />எழுதிய emailகளென்ன...<br />பதித்த blogகளென்ன...<br />என்ன என்ன என்ன....!!!!!Unknownnoreply@blogger.com35tag:blogger.com,1999:blog-8398000.post-1138873233138605392006-02-02T15:03:00.000+05:302006-02-03T01:05:50.476+05:30தப்பித்த தவளைகள்மஞ்சள்நீர்த் தெளிப்பு விழா அழைப்பு<br />------------------------------------<br /><br />கூடிய சீக்கிரம் என்னை பலிகொடுக்கும் திருவிழா நடக்கவுள்ளதால், கழுத்து வெட்டும்முன் மஞ்சள்நீர்த் தெளிப்பு விழா, நிகழும் பார்த்திப ஆண்டு ·பிப்ரவரி 2ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதுதான் எனக்கு முதல் நிச்சயதார்த்தம் என்பதால் எப்படி வரவேற்க வேண்டும் என்று தெரியவில்லை. பத்திரிக்கை ஏதும் நிச்சயதார்த்தத்திற்கென்று தனியாக அச்சடிக்காததால் இந்த மடலையே கவிதையாக, மன்னிக்கவும், பத்திரிக்கையாக நினைத்துக்கொள்ளவும்.<br /><br />காந்தி லால் ஜெயின் திருமண மண்டபம்<br />கோடம்பாக்கம் ரோடு<br />மேற்கு சைதை<br />சென்னை<br /><br />மேற்குறிப்பிட்ட வரிகள் நிச்சயம் கவிதை முயற்சி அல்ல என்பதையும், மஞ்சல்நீர்த் தெளிப்பு விழா (அதான், ஆட்டை வெட்டறதுக்கு முன்னாடி ஏதோ தெளிப்பாங்களாமே) நடக்கும் பலிபீடம்.... வந்து,திருமண மண்டபம்தான் என்றும் உறுதி கூறுகிறேன்.<br /><br />மேலும், 4:00-5:30க்குள் நடக்கும் என்று PTI செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.<br /><br />தாங்கள் தங்கள் சுற்றமித்ர பந்துக்களுடன் புடைசூழ வந்திருந்து மரபுக்கவிதை வாசிக்கவேண்டுமாய்....இல்ல இல்ல, தப்பா சொல்லிட்டேன்... மரபுப்படி ஆசிர்வதிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />இங்ஙனம்,<br />ஆடு (எ) sheep (எ) பக்ரா (எ) Krupa Shankar<br /><br />*************************************************************************************<br /><br />நிச்சயதார்த்த விழா அழைப்பு<br />=======================<br /><br />('திருமண ஒப்பந்த விழா'ன்னு தமிழில சொல்லலாமா?)<br /><br />வருகிற வெள்ளிக்கிழமை (03-02-2006) அன்று நடைபெற உள்ள எனது நிச்சயதார்த்த விழாவுக்கு நண்பர்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.<br /><br />இடம்: அன்னப்ப ராஜா திருமண மண்டபம்,<br />·பாரஸ்ட் ரோடு, பங்களா மேடு, தேனி.<br /><br />நாள்: 03-02-2006<br /><br />நேரம்: மாலை ஐந்து மணி தொடங்கி ஆறு மணிக்குள்<br /><br />உங்கள் சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து எங்கள் இல்லறம் சிறக்க இருவரையும்<br />வாழ்த்தினால் மகிழ்வோம்.<br /><br />திருமணம், வைகாசி மாதத்தில் (ஜுன் 2006) நடைபெறக் கூடும் என்று நம்பத்<br />தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமண நாள் உறுதி செய்யப்பட்டதும்<br />தெரிவிக்கிறேன். அதற்கும் இம்மடல் மூலம் ஒரு நிற்கும் அழைப்பு (standing<br />invitation!!) இருப்பதாகக் கருதிக் கொள்ளவும்.<br /><br />உங்கள் ஆசிகளை எதிர்நோக்கும், -- மீனாக்ஸ் & சுபாUnknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8398000.post-1138018097182263782006-01-23T17:33:00.000+05:302006-01-23T21:22:56.150+05:30மேல்Kind ஈ-புக்நிகழும் தாரண ஆண்டு ஃபிப்ரவரி பதினான்காம் தேதியாம் <strike>காதலர்</strike> நண்பர்கள் தினமாம் லவ்லெட்டர் மற்றும் ரூ. 395.95 சங்கமிக்கும் சுபயோக சுபதினத்தில் மேல்Kind ஹீ ஹீ ஹீ... ஈஈ ஈஈ ஈ-புக் ஒன்று வெளியாக இருக்கிறது. பேச்சுலர்களும் பேச்சிலர்களும் தங்கள் படைப்புகளை மேல்Kindக்கு <a href="meenakshisankar@gmail.com">meenakshisankar@gmail.com</a> என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தால் E-bookஇல் சேர்க்க ஏதுவாக இருக்கும்.<br /><br /><br /><u>படைப்பாளிகளுக்கான நிபந்தனைகள்</u><br /><br /><ol type="1"><li>ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகள் மட்டுமே ஒரு நபர் அனுப்பி வைக்கலாம். ஒன்றுக்கும் குறைவான படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.</li><br /><br /><li> படைப்பு எந்த விஷயத்தைப் பற்றிவேண்டுமானாலும் இருக்கலாம். எனினும், தந்தைக்குலம் சந்திக்கும் சமூக, அரசியல் ரீதியான ப்ரச்சனைகள், ஆண்கள் பணியகச்சூழலில் சந்திக்கும் ப்ரச்சனைகள், வாழ்க்கை ப்ரச்சனைகள், சுகமான அனுபவங்கள், மலரும் நினைவுகள் போன்றவை சார்ந்ததாக படைப்பு இருந்தால் ஈரேழு உலகிலும் உள்ள ஆணினம் வாழ்த்திப் போற்றும்.</li><br /><li> கண்டிப்பாக ஜாதி, அரசியல் சார்ந்த படைப்புகளை அனுப்பிவைக்க வேண்டாம். ஆனால் ஔவையாரே ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல்லியிருப்பதால், ஆண்ஜாதி(யைப் போற்றியும்), பெண்ஜாதி(யைத் தூற்றியும்) சம்பந்தப்பட்ட படைப்புகள் விரும்பி வரவேற்கப்படுகின்றன.</li><br /><li> சப்பாத்திக்கட்டை சிண்ட்ரோம், இலுப்பக்கரண்டிஃபோபியா இருக்கும் கணவன்மார்கள் 'விபத்து'களிலிருந்து தப்பிக்கும்பொருட்டு புனைப்பெயரிலேயே படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.</li><br /><li> மகளிருக்கு 0.33% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதால் தாய்க்குலங்களும் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.</li><br /><li> கிளுகிளுப்புக் கதைகளுக்கென தனிப் பகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது ஆறாவது நிபந்தனையாக இருக்கவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. ஏனெனில், அது வெறும் அறிவிப்பு மட்டுமே. அதனால், ஆபாசம் தவிர்த்து அறிவுபூர்வமான (?!) விஷயங்கள் இருப்பதில் தவறில்லை.</li><br /><li> சமீபத்திலோ வெகுநாட்களுக்கு முன்னரோ கண்ணாலம் கட்டினவுங்கோ.... ச்சே... லோக்கல் பாஷபா...திருமணம் செய்துகொண்டவர்கள், தங்கள் வாழ்க்கைத்துணைக்கு ஏதேனும் சொல்ல நினைத்தால் (தைரியமாக) இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.</li><br /><li> காதலுக்கும் கஷ்டத்துக்கும் மொழி ஒரு தடையில்லை என்பதால், மேல்Kind ஈபுக்குக்கும் மொழி ஒரு தடை இல்லை. ஆங்கிலத்தில் எழுதுவதுதான் வசதிப்படும் என்றால் ஆங்கிலத்திலேயே படைப்புகளை எழுதி அனுப்பலாம். விரும்பினால், மொழிபெயர்த்தோ அல்லது அப்படியே ஆங்கிலத்திலேயேவோ பிரசுரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.</li><br /><li><font color=red>படைப்புகளை அனுப்பி வைக்க ஃபிப்ரவரி 10ஆம் தேதி வரை நேரமிருக்கிறது ஐயா. எனவே ரோசிச்சி, யோசிச்சி பட்டையை ஓட்டவும் (பின்ன எத்தனை நாளைக்குத்தான் பட்டையைக் கிளப்பறதோடயே நெறுத்திக்கறது?).</font> </li><br /></ol><br /><u>ஈ-புக் பற்றி...</u><br /><ul type="circle"><li> ஈ-புக்கின் முதல் பிரதியை யாஹு File Transfer உதவியுடன் பிரபலமான ஒரு சிறப்பு விருந்தினர் பெற்றுக்கொள்வார். </li><br /><li> ஈ-புக்கில் விளம்பரங்கள் செய்ய விரும்புவோர் மேற்கண்ட மின்னஞ்சலையே தொடர்பு கொள்ளலாம். ஈ-புக்கைப் போலவே விளம்பரங்களும் இலவசம். ஆனால் 23,854 விளம்பரங்களுக்கு மட்டுமே இடம் இருப்பதால், உங்கள் விளம்பரத்திற்கு முந்துங்கள்.</li></ul>Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8398000.post-1126082699951518092005-09-07T14:07:00.000+05:302005-09-07T14:14:59.956+05:30பேட்டைப் பிள்ளையாரும் பேச்சுலரின் ஃபீலிங்கும்பேச்சுலர் சங்கத்தின் சீனியர் உறுப்பினர் பிள்ளையாருக்கு இன்று பிறந்தநாள்.<br /><br />ஒவ்வொரு ஆண்டும் என் தம்பிதான் கடைத்தெருவுக்குப் போய் பிள்ளையார் வாங்கி பூஜை எல்லாம் பண்ணுவான். இந்த ஆண்டு இந்தியத் தலைநகருக்குச் சென்று விட்டதால் நானே அத்திருப்பணியைச் சிறப்பாகச் செய்துமுடிக்க பக்தகோடிகள் (வீட்டுலதான்) தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்கள்.<br /><br />சென்னையின் அருந்தலமாம் சைதைத் திருத்தலத்தில் இந்த ஆண்டு களிமண்ணில் பண்ணிய பிள்ளையார் சிலையின் விலை ரூ. 15. என் அப்பா வழித் தாத்தாவுக்கு களி மண்ணில் பிள்ளையார் பிடிக்கத் தெரியும். எனக்குத் தெரியாது, களிமண் சுமந்திருந்தும் என்ன பயன்.<br /><br />சந்தனம், குங்குமம் வைத்து சாமந்திப்பூக்களை உதிர்த்து 'கஜகர்ணிகாய நமஹ' என்று சொல்லி உதடுகள் அர்ச்சித்தாலும் உள்ளம் ஃபீல் பண்ணாமல் இல்லை, "பேச்சுலரா பொறந்து பேச்சுலராவே வாழறியேப்பா இன்னமும்...".<br /><br /><center><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5590/239/1600/happybirthday_ganesaa.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5590/239/320/happybirthday_ganesaa.jpg" alt="" border="0" /></a></center><br /><br />பிள்ளையாருக்குப் பின்னாடி பொறந்தவங்க எல்லாம் மொதல்ல கொஞ்சநாள் பிள்ளையாருக்குப் பொறந்த நாள் கொண்டாடறாங்க. 30 வர்ஷம் கழிச்சு பிள்ளைங்களுக்கும் கொண்டாடறாங்க. ஆனா பிள்ளையார்! பாவம். ப்ரோக்ராமருக்கு பணியகம் மாதிரி, பிள்ளையாருக்கு பக்தர்களே கதி! கொஞ்சமாவது குடும்ப விவகாரங்களைக் கவனிக்க விட வேண்டாம் மக்கள்ஸ்? இருந்தாலும் என்னே உன் கருணை!<br /><br />'குதிரை ஒன்னு மட்டும் ஓடி ஜெய்க்கும் ரேசு இது' பழமொழியை நம்பிவிட்டாயா கணேசா?<br /><br />அடுத்த ஆண்டு தம்பதி சமேதராகப் பிறந்தநாள் கொண்டாட சக பேச்சுலரை மேல்Kind «í¸ò¾¢É÷¸û வாழ்த்தி வணங்குகிறோம்.Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8398000.post-1114792382588414092005-04-29T21:53:00.000+05:302005-04-29T22:03:02.593+05:30கதை, திரைக்கதை, வசனம்-இறைவன்<ul type=square><li>எங்கள் பணியகத்து க்ராஃபிக்ஸ் டிசைனர் பொய் சொல்கிறார் என்றால் யாராலாவது நம்ப முடியுமா?</li><li>யாஹுவிலிருந்து ரெடிஃப் மெய்லுக்கு கடிதம் வந்து சேர ஏன் தாமதம் ஆகிறது?</li></ul><br /><br />* * * * ** * * * ** * * * ** * * * *<br /><br />"இதான் என்னோட கணிப்பொறி." என்ற வரிதான் நான் அந்தப்பெண்ணுடன் முதல் முதலாகப் பேசிய வரி.<br /><br />பெண்பார்க்கப்போனப்போ கூட 'தனியா பேசிட்டு வாங்க' என்றதும் 'என்ன, எல்லாரும் நிறைய சீரியல் பாப்பேளாக்கும்?' என்று சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன்.<br /><br />ஆனால் திங்கட்கிழமை மறுபடியும் வீட்டிற்கு குடும்ப சகிதமாக எல்லோரும் வந்திருந்தனர். பிறகு நான், அந்தப்பெண், மற்றும் என் கம்ப்யூட்டர் மட்டும் ஒரு தனி அறையில். அப்போதான் 'இதுதான் என்னோட கணிப்பொறி.'<br /><br />"பொன்னியின்செல்வன் படிச்சாச்சா?"<br /><br />"கேள்விப்பட்டு இருக்கேன்." <br /><br />அப்போ படிச்சதில்லை! ஆஹா! போச், போச்!<br /><br />"அப்போ வேற எந்த கத புக்கும் கூட படிச்சதே இல்லையா?" என்று ஆவலுடன் கேட்டேன்.<br /><br /><br />"ம்ஹூம். டி.வி.தான் பார்ப்பேன். நிறைய சீரியல்ஸ் பாப்பேன்."<br /><br />வந்தியத்தேவன் புடிக்குமா, சேந்தன் அமுதன் புடிக்குமான்னு தெனமும் பேசிப்பேசி சந்தோஷப்படலாம்னு நெனச்சேன். அருள்மொழிவர்மன் யானையோட காதுல என்னமோ சொல்லி யானை வேகமா போனது, அந்தக்காலத்துலயே கல்கிக்கு ரஜினி பத்தி ஐடியா இருந்துருக்குன்னு சொல்லலாம்னு நெனச்சேன். ஆழ்வார்க்கடியான் என்ன ஒரு புத்திசாலி! வந்தியத்தேவன் ரவிதாசன் என்கௌண்டர் நெனச்சு நெனச்சு பார்த்து என்ஜாய் பண்ணலாம். "நீங்கள் இந்த வாளைப்பற்றி கேட்காவிட்டால், நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்காது" டயலாக் என்ன ஒரு டயலாக்! அப்பறம் வந்தியத்தேவன் போன எடத்துக்கெல்லாம் போய்ட்டு வரலாம் நாமளும். பூங்குழலி புடிச்சா கோடியக்கரைப்பக்கமா போகலாம். குந்தவை புடிச்சா பழையாறைக்கும் போய்ட்டு வரலாம். ரெண்டும் புடிச்சிருந்தா பெரியகோயில்ல போய் கல்வெட்டு படிக்க் கத்துக்கலாம். "கொடுத்தார் கொடுத்தனவும்" கல்வெட்டு எங்க இருக்குன்னு பார்கலாம்.<br /><br />சரி வுடு. ஜெயமோகன், சுந்தரராமசாமி என்று எல்லாம் என்னைப்போலவே இந்தப்பெண்ணுக்கும் ஒன்றும் புரியாது.<br /><br />"நமக்கு கல்யாணம் ஓக்கே ஆனாலும் எப்படியும் நிறைய நாள் இருக்கு இல்லையா? கண்டிப்பா பொன்னியின் செல்வன் படிங்க, ப்ளீஸ். நானே வாங்கித் தரட்டுமா?" என்றேன்.<br /><br />"ம். சரி. புக் வாங்கி அனுப்புங்க. உள்ள உங்க ஃபுல்சைஸ் ஃபோட்டோ ஒன்னு வெச்சு..."<br /><br />புத்தகவாசமே கிடையாதாம். மிச்ச விஷயத்துக்கெல்லாம் போகலாம்.<br /><br />"என்கிட்ட நீங்க எதாவது கேக்கணுமா? நானே ரொம்ப நேரமா பேசிண்டு இருக்கேன்." என்றேன்.<br /><br />"ம்ம். கல்யாணம் ஆனப்பறம் காலேஜ்க்கு எதுல போறது?"<br /><br />"ட்ரெய்ன் இருக்கே..."<br /><br />"ம்ஹூம். நீங்க கொண்டு விட முடியுமா, ப்ளீஸ்."<br /><br />"சரி, எத்தனை மணிக்கு காத்தால?"<br /><br />"ஒரு 7:30, 7:45க்கு களம்பினா போதும்."<br /><br />"ஆ, அப்போ கொறைஞ்சது 7:00 மணிக்காவது எழுந்துக்கணுமா! எனக்கு 7:00 மணி எல்லாம் நடுராத்தி மாதிரி.... "<br /><br />"கொஞ்ச நாளைக்கு மட்டும். அப்பறம் பழகினப்பறம் நானே போய்க்கறேன்."<br /><br />ததாஸ்து!<br /><br />"கம்ப்யூட்டர்ல தமிழ்ல எல்லாம் எழுதி பழக்கம் இருக்கா?" என்று ஆரம்பித்தேன்.<br /><br />"ம்ஹூம். காலேஜ்ல ப்ராஜக்ட்க்கு மெட்டீரியல் கலெக்ட் பண்ணனும்னா என் ஃப்ரெண்ட் கூட போவேன். என் ஃப்ரெண்ட் தான் எடுத்துத் தருவா."<br /><br />"ஓ, அப்போ அதிகமா ப்ரௌசிங்க் செண்டரே போறதில்லையா? சரி, ஈ-மெய்ல் ஐ.டி. என்னது?"<br /><br />"இல்லை."<br /><br />"ம்ம்ம், என்னது? ஈ-மெய்ல் அக்கௌண்ட்டே இல்லையா?"<br /><br />"ம்ம்ஹூம். ஆமாம், ஈ-மெய்ல் எப்படி அனுப்பறது? எனக்கு அப்பறமா ஒரு அக்கௌண்ட் க்ரியேட் பண்ணித் தர முடியுமா?"<br /><br />(க்ருபா, பொங்கி எழு! நல்லவேளை உனக்குத் தெரியாதது எதுவும் கேக்கலை.)<br /><br />உடனடியாக யாஹூ ரெஜிஸ்ட்ரேஷன் பக்கத்துக்குச் சென்றேன். படிவம் பூர்த்தி செய்யும் முன்னரே ஜாவாஸ்க்ரிப்ட் எரர். இந்த எரரை பலமுறை பார்த்து இருக்கிறேன். y_width ஆட்ரிப்யூட் undefined என்று திட்டும். ஃபயர்ஃபாக்சில் பிழைச்செய்தி காட்டாது. Refresh பண்ணி, டிஸ்கனெக்ட் பண்ணி, மீண்டும் அதே பக்கம் போய்... ம்ஹூம். ஒன்றும் கதைக்கே ஆகவில்லை. கிட்டத்திட்ட இருபதும் நிமிடங்கள் யாஹூவுக்கே போச்!<br /><br />சரி போ. rediffmailக்குப் போய்ப்பார்ப்போம்.<br /><br />ஒரு மாதிரி குத்துமதிப்பாக யூசர்நேம் பற்றி விளக்கினேன்.<br /><br />"யூசர்நேம் உங்க பேர்லயே கிடைக்கறது ரொம்ப கஷ்டம். வேற எதாவது பேர்லதான் வரும்."<br /><br />"என் பேரையே மொதல்ல போட்டுதான் பாப்போமே."<br /><br />"சரி, பாஸ்வேர்ட்...?"<br /><br />"ஷங்கர்."<br /><br />எனக்குப் முதலில் அதன் பொருள் புரியவில்லை. பிறகுதான் சுதாரித்துகொண்டதும் சிரிப்பு வந்தது.<br /><br />"ம்ம், நான் க்ருபாதான் பொதுவா. ஷங்கர்ன்னு அவ்வளவா யாரும் கூப்படறதில்லை. பரவாயில்லை, அதுவே இருக்கட்டும்."<br /><br />சப்மிட் பண்ணியதும் "இந்தப் பேர்ல யூசர்நேம் கிடையாது" என்று நான் சொன்னதையே (எவ்வளவு தீர்க்கதரிசனம்!!!) யாஹூவும் சொன்னது.<br /><br />"சரி, உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஏதாவது ஒரு விஷயத்தை உங்க பேர் பின்னாடியே சேர்த்துக்கலாம். உங்க அப்பா பேர், அம்மா பேர்....இல்லாட்டி புருஷன் பேர்." என்று விட்டு சிரித்தேன்.<br /><br />அது ஜோக் இல்லை போலிருக்கிறது. அந்தப்பெண் 'க்ருபா'வே இருக்கட்டும் என்று வலியுறுத்த, அந்தப் பெயரிலேயே ஐ.டி. உருவாக்கிட்டோம்.<br /><br />"சரி, இப்போ என்னோட யாஹு அக்கௌண்ட்ல இருந்து உங்களுக்கு ஒரு மெய்ல் அனுப்பறேன்." என்று விட்டு என் கணக்கிலிருந்து தமிழில் தட்டச்சடிக்க ஆரம்பித்தேன்.<br /><br />"புடிச்சுருக்கா?" என்று மெதுவாக என்னருகில் அந்தப்பெண்ணின் குரல் கேட்டது.<br /><br />(க்ருபா, அவ்வளவு சீக்கரம் சொல்லாத!)<br /><br />"புடிச்சுருக்கே நல்லா! நான் எப்பவும் IEதான் யூஸ் பண்ணுவேன். ஃபயர்ஃபாக்ஸை விட இதுதான் ரொம்ப புடிக்கும்"<br /><br />"என்னது?"<br /><br />"ப்ரௌசர்தானே கேட்டீங்க?" என்றேன்.<br /><br />"அது இல்லை."<br /><br />"பின்ன எது?" என்றேன்.<br /><br />(மனசு: 'என்னைப் புடிச்சு இருக்கா?'ன்னு கேட்டாதான் நேரிடையா பதில் சொல்வேனாக்கும்!)<br /><br />எப்படி சொல்வது என்ற தயக்கத்தால் சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.<br /><br />"ஓ, இந்த கம்ப்யூட்டரா. ஆமாம், ஆமாம். இது ரொம்ப புடிக்கும். புதுசு, செலரான். 2.4 கிகாஹெர்ட்ஸ்."<br /><br />"அத கேக்கலை..." என்ற அதே டோனில் அதே குரல் இன்னும் பிசிறி.<br /><br />ஐயோ பாவம்டா க்ருபா, ஏன் இப்படி விளையாடற? புடிச்சுருக்குங்கறதை சொல்லித் தொலையேன்.<br /><br />"பின்ன எது?" என்றேன் விடாமல்.<br /><br />பிறகு அந்த டாப்பிக் பக்கமே வரவில்லை.<br /><br />இதற்கிடையில் பேசிக்கொண்டே யாஹுவிலிருந்து நான் அனுப்பிய மடல் ரெடிஃப்மெய்லுக்குள் வந்துவிட்டதா என்று பார்த்தேன். ம்ஹூம். என்ன கஷ்டகாலம்டா இது. சரி போ, என் குற்றம் இல்லை. யாஹூ குற்றம். ரெடிஃப் குற்றம்.<br /><br />கிட்டத்திட்ட இரண்டு மணிநேரங்கள் ஆகிவிட்டதால் வெளியில் களேபரம். அம்மா கதவைத் தட்டும் சத்தம். ஐயோ! இன்பாக்ஸ்ல ஈமெய்ல் வந்தா எப்படி இருக்குன்னு சீக்கரம் காமிக்கணுமே!<br /><br />"நான் அப்பவே நெனச்சேன். நீ கம்ப்யூட்டர் முன்னாடிதான் ஒக்காந்துருப்பேன்னு. தனியாப்போய் பேசுடான்னு அனுப்பினா ரெண்டு மணிநேரமா கம்ப்யூட்டர் பத்திதான் பேசினயா? இன்னொரு நாள் பாத்துக்கோ அதையெல்லாம். ஏற்கனவே ரொம்ப இருட்டிப்போச்சு, நேரம் ஆச்சு களம்பணுமாம் எல்லாரும்."<br /><br />அம்மா, இரு. ஈமெய்ல் இன்னும் வந்து சேரலை.<br /><br />"இல்லம்மா, இரு ஒரே நிமிஷம்."<br /><br />"இந்தா டிஃபன்." என்று சொல்லி அம்மா டிஃபன் தட்டை இருவருக்கும் கொடுத்ததும் செஷன் முடிவுக்கு வந்தது புரிந்தது.<br /><br /><br />* * * * ** * * * ** * * * ** * * * *<br /><br />பெண்ணைப் பார்த்துப் பேசியகையோடு அதைப் பற்றி மறந்தும் விட்டேன். வழக்கம்போல் பணியகம் சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது இன்னொரு புது ப்ராஜக்ட்டில் இருக்கிறேன்.<br /><br />நான் இந்த வாரம் முழுதும் எதையோ நினைத்துக்கொண்டு தானாகவே சிரித்துக்கொள்வதாகச் சொல்கிறார் எங்கள் பணியக க்ராஃபிக்ஸ் டிசைனர். எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை.<br /><br />க்ராஃபிக்ஸ் டிசைனர் முதல் முதலாக பொய் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.Unknownnoreply@blogger.com49tag:blogger.com,1999:blog-8398000.post-1112388115266845362005-04-02T02:05:00.000+05:302006-03-15T05:30:55.610+05:30சும்மா, கொஞ்ச நேரம்..."ஃபர்ஸ்ட் ரேங்க் வரும்னு நெனச்சேன். மிஸ் ஆகிடுச்சு."<br /><br />"ரெண்டாவது ரேங்க் வாங்கினதுக்கா இவ்வளவு கவலைப்படற?"<br /><br />"ம்ஹ¥ம். பாஸ் ஆனாதான் ரேங்க் லிஸ்ட்லயே பேர் வருமாம். இன்னும் ஒரு மார்க் வாங்கியிருந்தா பாஸ் ஆகி இருப்பேன்."<br /><br />**************<br /><br />"ஸ்கூலுக்கே போகாம எப்பவும் கட் அடிச்சுட்டு வெளிலயே சுத்துவானே உங்க பையன், வளர்ந்ததும் இப்போ பெரிய மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவா ஆகிட்டானா?"<br /><br />"நீங்க வேற. கம்பனி கம்பனியா தாவி வேலையில்லாம இருக்கான்."<br /><br />**************<br /><br />"உனக்கு கணக்கு டீச்சர்ன்னா ரொம்ப புடிக்குமா ஏன்?"<br /><br />"இங்க்லீஷ் தெரியலைன்னு என்னைத் திட்ட மாட்டாங்க."<br /><br />"போன வாரம் இங்க்லீஷ் மிஸ் புடிக்கும்னயே?"<br /><br />"உண்மைதான். அவங்களும் எனக்கு கணக்கு தெரியலைன்னு திட்ட மாட்டாங்க"<br /><br />*****************<br /><br />"தலைவர்க்கு ஈமெய்ல் பயன்படுத்த கத்துக்குடுத்தயே, மொதல் காரியமா என்ன பண்ணினார்?"<br /><br />"தொகுதி மக்கள்கிட்ட இருந்து வர மின்னஞ்சல் எல்லாத்தையும் ஜங்க்மெய்ல் பாக்ஸ்க்கு போக செட் பண்ணினார்."<br /><br />**************<br /><br />"சுனாமி வருதுன்னு புரளியைக் கிளப்பிட்டு, இன்னமும் பொய் சொல்லலைன்னு சாதிக்கறாரே?"<br /><br />"அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வந்த அவரோட மனைவியைச் சொன்னாராம்."<br /><br />************Unknownnoreply@blogger.com24tag:blogger.com,1999:blog-8398000.post-1110300840598044312005-03-08T22:19:00.000+05:302005-03-08T22:24:00.600+05:30மகளிர் தின நல்வாழ்த்துக்கள்<img src="http://www.weblogimages.com/v.p?uid=shankarkrupa&pid=288889&sid=jIQ71EPTY9" border=0><br /><br />(என்ன இருந்தாலும் மேலKindக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை)Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8398000.post-1109866186560489142005-03-03T21:29:00.000+05:302005-03-03T21:39:46.566+05:30விருந்தினர்ப்பதிவு -நந்தகுமார் ராதாக்ருஷ்ணன்<strong><span style="font-family:arial;font-size:180%;"><u>The Bachelor</u></span></strong><br /><br /><span style="font-family:verdana;color:#003300;">It was not "someone" who called me a bachelor thefirst time. It was "something". The brownofficial-looking envelope I received by registeredpost that day had my degree certificate in it.'Bachelor of...', it announced in somewhat gaudyletters as I stood smiling. Bachelor!<br />Till then I was a boy, a brother, a student andwhatnot -- but not a bachelor. All of a sudden, thatimportant piece of paper had given me a new identity.</span><br /><br /><span style="font-family:verdana;color:#003300;">I know you are dying to tell me things like 'thisbachelor is not that bachelor', but believe me, thevery next day my phone rang. It was my real-estateagent, an uneasy reminder to the approachingexpiration of the initial company accommodation. "Sir,you are a bachelor, are you not?"</span><br /><br /><span style="font-family:verdana;color:#003300;">"Sure, I am," I said, almost adding, "and now I haveproof of that, if you need."<br /></span><br /><span style="font-family:verdana;color:#003300;">"Sorry sir. The owner is not willing to give thehouse to bachelors. But don't worry, sir, I have manyother houses. You see..."</span><br /><br /><span style="font-family:verdana;color:#003300;">So that's how it is. No country for the people ofPalestine. No food for starving Somalis. No trees formigrating birds. And yes, no houses for poorbachelors.</span><br /><br /><span style="font-family:verdana;color:#003300;">They are not welcome in residential areas. Bachelorsparty and make noise round the clock. They go afterthe neighborhood girls. They don't respect the normsof the colony. They come in groups...<br /></span><br /><span style="font-family:verdana;color:#003300;">Anyway, I learnt my lesson: Bachelors don't have allthe civil rights that 'normal' citizens enjoy. Butthen, what do we have that makes many a married guycherish the memories of his long-lost bachelorhood?<br /></span><br /><span style="font-family:verdana;color:#003300;">Palestinians have to cling to their land. Migratingbirds are bound by directions. But a bachelor has fewrestrictions. Except for renting an apartment andwalking into one those stupid 'couples only' clubs,he can have everything else.<br /></span><br /><span style="font-family:verdana;color:#003300;">He gets up at any time and sneaks into the officeunnoticed when others get ready for lunch. He sits toalmost any time in front of the computer withoutworrying about anxious where-are-you calls. He staysaway from the house for days and no questions areasked. He does whatever he wants on the weekend, inthe company of his friends...<br /></span><br /><span style="font-family:verdana;color:#003300;">Yes. Friends are the most important aspect of anybachelor's life. Without them he practically has noexistence, especially if he's staying away from home.But then one day, over the thundering music and thefirst round of cold beer in a dimly lit pub, heannounces his plans to get married to this cute girlthat someone else had found for him. Over the doublecheers, the naughty comments and laughter, I becomeaware of something that hurts me somewhere.<br /></span><br /><span style="font-family:verdana;color:#003300;">My friend's getting married. Of course it'ssomething to celebrate. But then, that also means he'sleaving the gang! We attend his wedding, the mostcolorful function of his life, in full spirits. All of us. We give him gifts, wish him good luck and retreatto our good old world, one member less. It does nottake much time before we find him reduced tomuch-delayed replies to our bunch of mails -- and asfor phone calls, that comes only once in a blue moon.</span><br /><br /><span style="font-family:verdana;color:#003300;">For my part, I watch the pile of wedding invitationsin the corner of my desk grow at an amazing, alarmingpace. Before I know it, most of my cool buddies aregone. And the rest of us soon realize that we are notalways welcome to the new circle the married men haveformed. So we seek solace behind those office doorswhere the sun never sets.</span><br /><br /><span style="font-family:verdana;color:#003300;">I do meet my married friends occasionally. In theoffice, on a casual walk, or in a busy restaurant.They are my friends still. And they are still friendlyas much as their new lifestyle and addedresponsibilities permit.<br /></span><br /><span style="font-family:verdana;color:#003300;">But... Oh heck, there's my telephone. I think it ismy real-estate agent again.<br /></span><br /><span style="font-family:verdana;color:#003300;">--~ The Bachelor</span><br /><span style="font-family:Verdana;color:#003300;"></span><br /><span style="color:#000099;"><span style="font-size:85%;">பி.கு.: இதை அப்படியே சாரம் மாறாமல் தமிழில் மொழிபெயர்ப்பவர்களுக்கு மேல்Kind சார்பில் ஒரு பரிசு (கொள்ளு அல்லது தவிடு மூட்டை) தரப்படும். யாராவது...?</span> </span>Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8398000.post-1109326307496947992005-02-25T15:37:00.000+05:302005-02-25T15:46:34.460+05:30சத்தி விடங்கிநேற்று கோழியர் சங்கம் வரைப் போய் வந்தேன். காதில் கேட்ட சில உரையாடல்கள் இதோ...<br /><br /><br /> <table border="0" width="300"><tbody><tr><td class="kurippugaldotted">"<br />"என் கணவருக்குத் தங்கமான மனசு"<br /><br />"அப்படியா?"<br /><br />"ஆமாம். நேத்து கூட அன்பா 'துஷா துஷா, உன் கை தவறி விழுந்தாலும், என் தலைல பட்டதாலதான் அந்த சப்பாத்திக்கட்டை உடைஞ்சது. அழாதே'ன்னு சமாதானப்படுத்தினார்."</td></tr></tbody></table><br /><br /><table align="center" border="0" width="400"><tbody><tr><td class="kurippugal"><br />"உங்க கணவரோட ரொம்பநாளா குடித்தனம் நடத்தறீங்க போலருக்கே!"<br /><br />"எப்படி நெல்வசாயகி கண்டுபுடிச்சீங்க?"<br /><br />"வாசல்ல 'நாய் ஜாக்கிரதை'ன்னு போர்டு வெச்சுருக்கீங்களே, அதான்."</td></tr></tbody></table><br /><br /><table border="0" width="400"><tbody><tr><td class="kurippugal">"யெஜந்தி, எல்லாப் பெண்களும் சேர்ந்து படம் எடுத்த என்னபடம் வைப்பாங்க?"<br /><br />"மண்மதி"</td></tr></tbody></table><br /><br /><table align="center" border="1" width="450"><tbody><tr><td class="kurippugaldotted">"ஒரு வேலையுமே செய்யாம இப்படி வீட்ல மரமா ஆன மாதிரி இருக்கியே? உன் கணவர் ஒன்னும் சொல்றதில்ல?"<br /><br />"மரம் என்ன மரம்! நான் புல்லே ஆனாலும் அவர் புருஷன்தானாம்"</td></tr></tbody></table><br /><br /><table align="left"><tbody><tr><td class="kurippugallast">"என்ன, உனக்கும் உன் மாமியாருக்கும் சண்டையே வராதா? அது எப்படி?"<br /><br />"யோவ், நான் கோழியர் சங்க வாட்ச்Man. போ வெளில!"</td></tr></tbody></table><br /><br /><br /><br /><br />கோழி என்ற ஒரு சொல் மேல்Kindஇல் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, "கழுதைகளைப் பற்றி சில உண்மைகள்" போன்று தலைப்பிட்டு ஏதேனும் அங்கதங்கள் கோழியர்ப்பதிவில் இடம்பெறலாம். தொடர்ந்து பல்லி, பூரான், வௌவால், நட்டுவாக்கிளி ஆகியவைகளைத் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் சாதக பாதகங்களைப் பற்றியும் அலசப்படும்.Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8398000.post-1107937399520838292005-02-09T13:53:00.000+05:302005-02-09T13:53:19.520+05:30untitled<p id=m>Selpdsiyil irunthu padhippiththa pulambal ithu. thamizil ezuththukkal therigirathaa?</p> Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8398000.post-1107846369170565022005-02-08T12:36:00.000+05:302005-02-08T12:36:09.276+05:30untitledVanakkam.<br>cell phone-la irundhu chummaa oru test posting.<img width="320" src="http://photos1.blogger.com/blogger/5590/239/0/.nnamed-image-1-769170"/><br/>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8398000.post-1106581705364133892005-01-24T20:51:00.000+05:302005-01-24T21:31:07.100+05:30மேல்Kind Revision ExaminationMatch the following: <strong>(5 x 4=20)</strong>
<br />--------------------
<br /><font size=-1><strong>'அ' வரிசையில் காணப்படும் சொற்களுக்கு மிகப்பொருந்தக்கூடிய வார்த்தைகளை 'ஆ' வரிசையிலிருந்து தேர்ந்த்டுக்கவும்.</strong></font>
<br />
<br /><table border=1><tr><th>எண்</th><th>அ</th><th>ஆ</th></tr><tr><td>1</td><td>அன்புள்ள</td><td>மனைவி</td></tr><tr><td>2</td><td>டேய்</td><td>ஆசிரியர்</td></tr><tr><td>3</td><td>ப்ரியமான</td><td>அம்மா</td></tr><tr><td>4</td><td>மதிப்பிற்குரிய</td><td>நண்பன்</td></tr><tr><td>5</td><td>அடியேய்</td><td>காதலி</td></tr></table>
<br />
<br />Re-arrange jumbled words <strong>(1 x 10=10)</strong>
<br />-------------------------
<br /><font size=-1><strong>கீழ்க்காணும் வாக்கியத்தின் வார்த்தைகள் சற்று குழம்பியுள்ளதால் மாற்றுபொருள் தருகிறது. அதைத் திருத்தி அமைத்து சரியான பொருள் காண்க:</strong></font>
<br />
<br />கண்ணே நேற்று இரவும் மின்சாரம் இல்லை. தூங்கும் உன் அப்பாவைப் பார்த்துத் தாக்கி பணம் வாங்கித் தா; பில் கட்ட வேண்டும். பிறகு நாளை மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம், முதலில் முத்தமிட்டுக் கொள்கிறேன்.
<br />
<br />Odd word out <strong>(5 x 4 = 20)</strong>
<br />------------
<br /><font size=-1><strong>கீழ்க்காணும் வரிகளில் ஒவ்வொரு நான்கு வார்த்தைகளிலும் ஒரே ஒரு வார்த்தை மட்டும் மற்ற மூன்றுடன் பொருந்தாமல் உள்ளது. அவ்வார்த்தையைக் கண்டுபிடிக்கவும்</strong></font>
<br />
<br />1) புத்திசாலி, பகுத்தறிவு, விவேகம், காதல்
<br />2) நிம்மதி, அமைதி, திருமணம், சாந்தம்
<br />3) லவ்லட்டர், உழைப்பு, உயர்வு, முன்னேற்றம்
<br />4) வெட்கம், மானம், அரியர்ஸ், கவரிமான்
<br />5) தெனாவெட்டு,கிண்டல், இளமை, மூப்பு
<br />
<br /><hr>
<br />விடைகள்
<br />---------
<br /><font size=-2>Match the following:
<br />அன்புள்ள=அம்மா, டேய்=நண்பன், ப்ரியமான=காதலி, மாதிப்பிற்குரிய=ஆசிரியர், அடியேய்=மனைவி
<br />
<br />Jumbled Words:
<br />கண்ணே, நேற்று இரவும் உன் மின்சாரப் பார்வைத் தாக்கி தூக்கம் இல்லை. நாளை முதலில் பார்த்துக்கொள்ளலாம், முத்தமிட்டு மருத்துவம் தா. உன் அப்பாவைப் பிறகு பார்த்து பில் கட்டிக் கொள்கிறேன்.
<br />
<br />Odd word out:
<br />1=காதல், 2=திருமணம், 3=லவ்லட்டர்,4=அரியர்ஸ்,5=மூப்பு</font>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8398000.post-1104422447092558542004-12-30T21:18:00.000+05:302004-12-30T21:30:47.093+05:30திட்ட(டும்) நிரல்"ஜாவா ப்ரோக்ராமரும் கல்யாணமான ஆணும் ஒன்னு."
<br />
<br /><span style="color:#ff0000;">"எதை வெச்சு அப்படி சொல்ற?"</span>
<br />
<br />
<br />
<br /><u>ரெண்டுலயும் அனுபவம் இல்லாத krupa வின் கருத்து</u>
<br />
<br />"ரெண்டு பேருமே ·பங்க்ஷன்களையும் ஆர்க்யுமென்ட்களையும் எதிர்கொள்ளணும்."
<br />
<br /><span style="color:#ff0000;">"என்ன சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு? எல்லா ப்ரோக்ராம்லயும் தான் ·பங்க்ஷணும் ஆர்க்யுமென்ட்சும் இருக்கே?"</span>
<br />
<br /><strong>"எல்லா பொண்ணுங்களாலயும் கூடதான் ·பங்க்ஷன்களையும் ஆர்க்யுமென்ட்களையும் சமாளிக்க வேண்டியதா இருக்கே?"</strong>
<br />
<br />
<br />
<br /><u>ரெண்டுலயும் அனுபவசாலி ரவியாவின் கருத்துக்கள்</u>
<br /><ul type="circle"><li>"சரியான தலைவலி"
<br /></li><li>"ஜாவா எப்ப கால வாரும்னு சொல்ல முடியாது. ஏன் தகராறு பண்ணுதுன்னு கண்டுபுடிக்கறதே கஷ்டம். wifeம்தான்"</li></ul><strong>No comments! ;-)
<br />
<br /></strong><strong></strong>
<br />Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8398000.post-1104048498959355272004-12-26T13:27:00.000+05:302004-12-26T13:55:09.070+05:30விருந்தினர் பதிவு: ரஜினி ராம்கி - 2<font color="green"><b>விஜய் டிவியின் 'அழகி'</b>
<br />
<br /><center><img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/vijaytvazagi.jpg"></center>
<br />
<br />விஜய் டிவில புதுசா ஒரு நிகழ்ச்சி. அழகியாம்! வழக்கம்போலவே புதுமையா ஒரு விஷயம் செஞ்சிருக்காங்க. நிகழ்ச்சியோட நோக்கம் (ஹி...ஹி அப்டீன்னு சொல்லிக்கிறாங்கோ!) 'தமிழச்சி'களை கண்டுபிடிச்சு என்கரேஜ் பண்றதாம்!
<br />
<br />'குலுக்கல்' முறையோ என்னவோ எப்படியோ ஒரு 200 பொண்ணுங்களை (இன்னும் கல்யாணமாகாதவங்க மட்டும்!) செலக்ட் பண்ணி அவங்ககிட்ட தனித்தனியா கேள்வி கேட்டு பெஸ்ட் தமிழச்சியை தேர்ந்தெடுக்கப் போறாங்களாம். வர்ற பொண்ணுங்களெல்லாம் சமூக சேவை செய்யப்போறேன், சினிமாவுல நடிப்பேன், அரசியலுக்கு வருவேன், மதர் தெரஸா மாதிரி ஆவேன்னு டயலாக் எடுத்து வுடறதை கேட்டு காதே புளிச்சுப் போயிடுச்சு... இது வழக்கமான அழகி
<br />போட்டியில்லைன்னு தேர்வுக்கமிட்டியிலிருந்து ஒரு அம்மா வந்து அட்வைஸ் பண்ணினார். ஏதோ ஒரு நடிகையை அழைச்சுட்டு வந்து கருத்து கேட்டாங்க. அவங்களும் பொண்ணுங்களை புடவை சகிதம் பார்க்கிறது அழகா ருக்குதுன்னு இங்கிலீஷில் சொல்லி வைச்சாங்க. சம்பந்தப்பட்ட நடிகை என்ன காஸ்ட்யூம்ல வந்திருப்பாங்கன்னு சொல்லவே வேணாம்!
<br />
<br />தேர்வுக் கமிட்டி உறுப்பினர்களில் 'மக்கள் யார் பக்கம்' கோபியும் ஒருத்தர் (மனுஷன், கொஞ்சூண்டு தொப்பையை குறைச்சிருக்கார்!). புற அழகை விட பெண்களின் அறிவுதான் உண்மையான அழகுன்னு தான் நினைக்கிறதா சொன்னார். மனுஷனுக்கு நேரம் சரியில்லை போலிருக்கு, முதல் சுற்றில் தேர்வாகி இரண்டாவது சுற்றுக்கு போகும் பெண்களின் பட்டியலை அறிவிக்கிற வேலை கோபிக்கு. நான் நம்பர் சொல்றவங்களெல்லாம் எழுந்திரிச்சு வெளியே போயிடலாம்னார். ரெண்டு பெண்மணிகள் என்னோட நம்பரை நீங்க சொல்லவேயில்லை... நாங்க வெளியே போக முடியாதுன்னு முஷ்டியை உயர்த்த
<br />செம காமெடி. 'பார்த்தா கல்யாணம் ஆகாதவங்க மாதிரியே
<br />தெரியலையே'ன்னு தேர்வுக் கமிட்டியிலிருந்த யாரோ கேட்டு வைக்க களேபர மேடையில் நடந்த உச்சபட்ச காமெடி காட்சிகளை காமிரா அப்படியே விழுங்கிக் கொண்டது!
<br />
<br />அடுத்த ரவுண்டு, செம கலக்கல். பாட் கேட்வாக்! அதாவது பட்டுப்புடவை கட்டிக்கிட்டு கையிலொரு பானையை சுமந்தபடி நடந்து வரவேண்டும். சிலருக்கு புடவை கட்டத்தெரியலைன்னா பல பேருக்கு பானை புடிக்கத் தெரியலை. சிரிச்சுக்கிட்டே நடந்து வரணுமா அல்லது சீரியஸா நடந்துவரணுமான்னு பெரிய சந்தேகம். இந்த ரவுண்டிலேயே மொத்த டீமும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.
<br />
<br />தமிழ்நாட்டுல பல பொண்ணுங்களுக்கு சரியா புடவை கட்டத்தெரியாதுன்னு தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரியப்படுத்தின விஜய் டிவியை என்ன பண்ணலாம்?!</font>மீனாக்ஸ் | Meenakshttp://www.blogger.com/profile/14059186829417774107noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8398000.post-1103784686285998622004-12-23T13:17:00.000+05:302004-12-23T12:21:26.286+05:30படக்கோப்புமேல்Kind அங்கத்தினர்களின் படங்களைப் பார்த்திராதவர்கள் பார்த்து பரவசப்படவும், ஏற்கனவே பார்த்தவர்கள் மீண்டும் பார்க்கவும் இப்பதிவு சமர்ப்பிக்கப்படுகிறது.
<br />
<br /><img src="http://www.weblogimages.com/v.p?uid=shankarkrupa&pid=248916&sid=gpA38ahDX8" border="0" />
<br />Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8398000.post-1103309512629279692004-12-18T01:15:00.000+05:302004-12-18T00:37:32.336+05:30ப்ளாகர் பின்னூட்டம்-நினைவிருக்கும் வரைப்ளாகரில் anonymous பின்னூட்ட வசதி செய்து கொடுத்து சுரதாவின் எழுத்துரு மாற்றியை இணைத்து வைத்திருக்கும் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு சின்ன tip.
<br />
<br />Haloscan போன்ற இலவச பின்னூட்ட சேவைகளிலெல்லாம் பின்னூட்டம் அளித்தவரின் பெயர், மின்னஞ்சல்/வலைப்பதிவு முகவரியை நினைவில் தக்க வைத்திருக்கவும் ஒரு வசதி இருக்கும். அதே மாதிரி Blogspotலயும் பண்ணணும்னு நெனச்சா...
<br />
<br />பின்னூட்டப் பெட்டி இருக்கும் இல்லையா, கமெண்ட் பகுதியில்...? அதுல கீழ்க்காணும் வரியைச் சேர்க்கணும் மொதல்ல.
<br />
<br /><font color='red'>
<br /><input type=checkbox name="ninaivilvai"> <font size=-4>neeyaavadhu ngyaabagam vechchukko</font></font>
<br />
<br />ஆச்சா... அடுத்ததா <script> tag க்குள் கீழ்க்காணும் வரிகளைச் சேர்க்கணும்.
<br />
<br /><font color='red'>
<br />function nirappu(){
<br />for(lngStart=0;lngStart<document.forms.length;lngStart++)
<br />{
<br /> try{
<br /> if(GetCookie("username")!==null) document.forms[lngStart].strName.value=GetCookie("username")
<br /> if(GetCookie("url")!==null) document.forms[lngStart].strURL.value=GetCookie("url")
<br /> document.forms[lngStart].ninaivilvai.checked=true
<br /> }
<br /> catch(err){
<br /> }
<br />}
<br />
<br />}
<br />function SetCookie (name, value) {
<br /> var argv = SetCookie.arguments;
<br /> var argc = SetCookie.arguments.length;
<br /> var expires = (argc > 2) ? argv[2] : null;
<br /> var path = (argc > 3) ? argv[3] : null;
<br /> var domain = (argc > 4) ? argv[4] : null;
<br /> var secure = (argc > 5) ? argv[5] : false;
<br /> document.cookie = name + "=" + escape (value) +
<br /> ((expires == null) ? "" : ("; expires=" + expires.toGMTString())) +
<br /> ((path == null) ? "" : ("; path=" + path)) +
<br /> ((domain == null) ? "" : ("; domain=" + domain)) +
<br /> ((secure == true) ? "; secure" : "");
<br />}
<br />
<br />
<br />function getCookieVal (offset) {
<br /> var endstr = document.cookie.indexOf (";", offset);
<br /> if (endstr == -1)
<br /> endstr = document.cookie.length;
<br /> return unescape(document.cookie.substring(offset, endstr));
<br /> }
<br />
<br />
<br />function GetCookie (name) {
<br /> var arg = name + "=";
<br /> var alen = arg.length;
<br /> var clen = document.cookie.length;
<br /> var i = 0;
<br /> while (i < clen) {
<br /> var j = i + alen;
<br /> if (document.cookie.substring(i, j) == arg)
<br /> return getCookieVal (j);
<br /> i = document.cookie.indexOf(" ", i) + 1;
<br /> if (i == 0) break;
<br /> }
<br />
<br />return null;
<br />}
<br /></font>
<br />
<br />அப்பறம் <font color='darkgreen'><body></font> அப்படின்னு இருக்கறதை <font color='red'><body onload="nirappu()"> </font>அப்படின்னு மாத்திடணும். அவ்வளவுதான் இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் பாக்கி.
<br />
<br />AddName அப்டீன்னு ஒரு ·பங்க்ஷன் இருக்கும். இருக்கா? அதுல
<br /><font color='darkgreen'>
<br />else {
<br /> form.postBody.value ......</font> மாதிரி வரிகள் இருக்கும். அந்த வரிகளுக்கு பதிலா கீழ இருக்கறதை அப்படியே பேஸ்ட் பண்ணிட்டா முடிஞ்சது:
<br />
<br /><font color='red'>
<br /> else {
<br /> form.postBody.value = form.postBody.value + '\n\n' + 'By: <a href="' + form.strURL.value + '">' + form.strName.value + '</a>';
<br /> if(form.ninaivilvai.checked)
<br /> {
<br /> var expdate = new Date ();
<br /> expdate.setTime(expdate.getTime() + (24 * 60 * 60 * 1000 * 31));
<br /> }
<br /> else
<br /> {
<br /> var expdate = new Date ();
<br /> }
<br /> SetCookie("username",form.strName.value,expdate,"/")
<br /> SetCookie("url",form.strURL.value,expdate,"/")
<br /> return true;
<br /></font>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8398000.post-1102707391798053112004-12-11T01:05:00.000+05:302004-12-11T01:08:17.960+05:30குட்டிச்சுவர் சிந்தனை 'முத்துக்கள்'விருப்புவெறுப்பு ஏதுமின்றி வெளியிடப்படும் ஒரு ஆராய்ச்சி முடி: <font size=-2>(ஹீ, ஹீ, ஆராய்ச்சி முடிவுல மட்டும்தான் விருப்புவெறுப்பு இல்லை, ஆராய்ச்சில அதெல்லாம் இருக்கும்)</font>
<br />
<br />
<br />1) 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்பது சிவாஜிக்கு சொல்லப்பட்ட வசனம்.
<br />2) பேருந்தில் நிறைய பெண்கள் என்னைத் திட்டித்திட்டி பொங்கி எழுகிறார்கள்
<br />3) எனவே நிறைய பெண்கள் சிவாஜி ரசிகர்கள்
<br />
<br />
<br />
<br />1) ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்.
<br />2) பல போராட்டங்களுக்குப் பிறகே வெற்றி கிடைக்கிறது
<br />3) எனவே பின்னாலிருக்கும் பெண் ஒரு போராட்டம்
<br />
<br />
<br />
<br />1) வீட்டில் கிழக்குமுகமாகப் படுத்து உறங்குவது தொழில் முன்னேற்றத்தைப் பெருக்கும்-வாஸ்து சாஸ்திரம்
<br />2) நம் பணியகத்தை நம் சொந்த வீடு போல் மதிக்க வேண்டும்
<br />3) எனவே பணியகத்தில் கிழக்குமுகமாகப் படுத்து உறங்கலாம்
<br />
<br />
<br />
<br />1) எனக்கு குடியரசுத்தலைவரின் அறிவுரைகள் பிடிக்கும்.
<br />2) <strong>'கனவு காணுங்கள்'</strong>-குடியரசுத்தலைவர்
<br />3) <a href="http://malekind.blogspot.com/2004/12/facial-bleaching.html">ஒரு மனதுக்குப் பிடித்த ஸ்பெஷல் "அவங்க" என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே கடந்தார்கள்</a>Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8398000.post-1101817860241116862004-11-30T17:57:00.000+05:302004-11-30T18:02:48.273+05:30மேல்Kind சர்வே 1 - பாகம் இரண்டு<u>பாகம் இரண்டு</u>
<br />
<br />கேட்கப்பட்ட கேள்வி:
<br /><blockquote><font color="blue">1. உங்கள் துணைவியாரை நீங்கள் முதன்முதலாகப் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய கருத்து/எண்ணம் யாது?</font></blockquote>
<br />கவித்துவமான ஒரு நிகழ்வைப் பற்றிய இந்தக் கேள்வி, சிறப்பான பதில்களைப் பெற்றுத் தரும் என்று நம்பினோம். அதன்படியே சிறந்த பதில்கள் கிடைத்தன. அவை இங்கே:
<br />
<br />-o0o-
<br />
<br /><strong>அருண் வைத்யநாதன்</strong>
<br />
<br /><font color="blue">கோவில் குளத்தில் தண்ணீரை எடுத்துத் தலையில் தெளிப்பதற்காக, அவள் மெதுவாய் படிக்கட்டுகளில் மெல்லிய பாதங்களை அடி மேல் அடியாய் வைக்க..நான் செய்த புண்ணியங்கள் அங்கு பாசியாய் குவிந்து இருந்ததை, அவளது பக்திக்கண்கள் பார்க்கத் தவறி, காலை அதன் மேல் வைக்க, குடம் வானில் குட்டிக் கரணம் (ஸ்லோமோஷனில்) அடித்த அந்த அரை நொடியில், அவளை எனது கைகள் தாங்கிப் பிடித்தது. அவளது ஐடெக்ஸ் கண்கள் துடிதுடிக்க, எனது அரும்பு மீசைகளுக்கு அடியில் இருந்த உதடு சினேகமாய் சிரித்து வைக்க...தம்தன தம்தன ஆஹாஹா...ஆஹாஹா..தம்தன தம்தன தம்தன தம்தன தம்தன தம்தன! இந்தக் கோடாலி கண்கள், எனது பிஞ்சு நெஞ்சு மரத்தை வெட்டி சாய்த்ததை.. அறியாமலேயே அவள் பார்வையை வேகமாய் வீசிக் கொண்டிருந்தாள் என்ற (எல்லாக் கவிஞர்களுக்கும் சுலபமாய் தோன்றக்கூடிய) வசன கவிதையை, விடுவிடுவென எடுத்து விட மறந்தாலும், டி.எம்.எஸ் டிஜிட்டல் இசையில் மெல்லியதாக, ஆனால் அதே சமயம் கணீரென்று 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்...' என்று பாடுவதை அவள் கேட்டிருப்பாளா என்று மனசு சின்னக்கவுண்டர் பம்பரமாய் சுற்றியது.
<br />
<br />மேலே சொன்னது போலெல்லாம்... ஒரு சந்திப்பும் அதைச்சுற்றிய நிகழ்வுகளும் நிஜ வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்போ நேரமோ இல்லாததால் தான், அன்று 'நினைவோ ஒரு பறவை' என்று கமல்ஹாசனில் ஆரம்பித்து, 'என்னாசை மைதிலியே' என்று ரீமிக்சுக்கு சிம்பு ஆடுவது வரை, பார்ப்பதற்கு சுவையாய் இருக்கிறதோ என்னவோ?! நான் என்னுடைய மனைவியை, 'இவதாண்டா என் பொண்டாட்டி' என்று டாக்டர் ராஜசேகர்தனமாய் சொல்வதற்கு முன்னால் பார்த்தது, நான் வேலை செய்து கொண்டிருந்த அலுவலகத்தில். அவள் வேலைக்கான நேர்முகத் தேர்வில் தேர்வாகி, உள்ளே இன்னும் சில வெற்றி பெற்ற புதுசுகளோடு உட்கார்ந்திருந்தாள். அப்போது அமெரிக்கா வருவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாய் ஈடுபட்டிருந்ததால், அலுவலகத்துக்கு நான் வருவதென்பது, ஆடிக்கொரு தடவை நடக்கும், அடிக்கடி நடக்காமலிருக்கும் சம்பவம். அப்போது என்னோடு பணிபுரிந்த நண்பனொருவன்,"டேய், நம்ம டீமுக்கு புதுசா நாலஞ்சு பேர் செலக்ட் ஆகியிருக்காங்க..போய்ப் பாரு!" என்று கண்ணடித்தான். வெட்டியாய் திரிந்து கொண்டிருந்த எனக்கு, இது போன்ற வாய்ப்புகளெல்லாம் கிடைத்ததென்றால் விட்டு விட மனசே வராத ரம்மியமானதொரு காலம். பட்டீரென கதவைத் திறந்து கொண்டு, தலையை நுழைத்து...ஒரு நோட்டம் விட்ட எனது கண்கள், இவள் மேல் மட்டும் இரண்டாவது முறை வேண்டுமென்றே தானாக ஸ்கேன் செய்தது. அப்போது எனது மனதில் தோன்றிய நிஜமான எண்ணம் என்னவென்றால், "அட...இந்தப் பொண்ணு நல்லாயிருக்கே!"</font>
<br />
<br /><font color="red">(தலைவா, 'என் ஆசை மைதிலியே' ரீமிக்ஸில சிம்பு ஆடுறது தான் உங்க கண்ணுக்குத் தெரிஞ்சதா? எங்களோட 'அவங்க' கஷ்டப்பட்டு ஆடினது தெரியலையா? என்ன ரசனையோ உங்களுக்கு போங்க!!)</font>
<br />
<br />-o0o-
<br />
<br /><strong>தேசிகன்</strong>
<br />
<br /><font color="blue">பெண் பார்க்க போனதைப் பற்றி சொல்வதற்கு முன் என்னை பற்றி...
<br />
<br />நான் சென்னை வாசி. 1 1/2 வருடங்களாக பஸ் ஸ்டண்ட், பீச், கோயில்கள், ரயில்வே ஸ்டேஷன் என்று அலைந்து கொண்டு இருந்தேன் - எல்லாம் ஒரு பெண்ணை பார்த்து காதலிக்கலாம் என்ற ஆசையுடன் (கொஞ்சம் அதிகமாக சினிமா பார்க்கும் ஆசாமி நான்). இப்படித்தான் ஒரு வெள்ளிக்கிழமை பார்த்தசாரதி கோயிலில் ஒரு பெண்ணை பார்த்து நான் அசடு வழிய..... அதை பற்றி அப்புறம்
<br />சொல்கிறேன். இதல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்ற முடிவுக்கு வந்து, என் அம்மாவுடன் பெண் பார்க்க சென்று இருந்தேன்.
<br />
<br />"எதுவாக இருந்தாலும் அங்கேயே பெண்ணை பார்த்து கேட்டு விடு"
<br />
<br />சென்ற இடத்தில் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நான் பெண் பார்க்க் வரும் செய்தி எப்படியோ தினத்தந்தியில் வந்துவிட்டது போல் அந்த காலனி கதவு, ஜன்னல் இடுக்கிலிருந்து எல்லேரும் என்னை எட்டி பார்த்து சிரிக்க, அந்த காலனி நாய் குட்டி என்னை பார்த்து செல்லமாக வாலையாட்டியது!
<br />
<br />பெண் வீட்டில் ஒரு பெரிய கூட்டம் காத்துக்கொண்டு இருந்தது. இப்படியும், அப்படியும் எல்லேரும் ஒடிக் கொண்டு இருக்க, சிலர் வலுக்கட்டாயமாக என்னை கேசரி சாப்பிடவேண்டும் என்று என்னுடன் போராடிக் கொண்டு இருக்க, அந்த கூட்டத்தில் எது பெண் என்று நான் தேடிக்கொண்டு இருந்தேன்.
<br />
<br />அங்கு இருந்த பாட்டி என்னிடம் "பெண்ணை பிடித்திருக்கா?"
<br />"எது பாட்டி பொண்ணு?"
<br />"அங்கே தலையை குனிந்து கொண்டு, பச்சை புடவை"
<br />
<br />அதற்க்குள் என் அம்மா என்னை பெண்ணுடன் எதாவது பேசு என்று அடம்பிடிக்க, கொஞ்சம் தைரியத்தை வர வைத்துக்கொண்டு, பஸ் ஸ்டண்ட் பிள்ளையருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு கிட்டே சென்று என்ன பேசுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன். (அடுத்த முறை மணிமேகலை பிரசுரத்திடம் "பெண் பார்க்கும் போது கேட்கும் கேள்விகள்" புத்தகம் இருக்கா என்று கேட்க வேண்டும்)
<br />
<br />சட்டென்று ஒரு கேள்வி உதயமாக,
<br />"எங்கு பி.காம் படிச்ச?"
<br />
<br />கொஞ்சநேரம் யோசித்து விட்டு அந்த பெண் "காலேஜில்" என்று மெதுவாக பதில் சொல்ல...
<br />
<br />எனக்கு அந்த பெண்ணை... நீங்களே முடிவு செய்யுங்களேன்!</font>
<br />
<br />-o0o-
<br />
<br /><strong>என். சொக்கன்</strong>
<br />
<br /><font color="blue">நான் என் மனைவி உமாவை முதன்முதலாகப் பார்த்தபோது, எங்கள் இருவருக்குமே வயது பத்துக்குக் குறைவுதான்.
<br />
<br />அந்த வயதில், இவர்தான் மனைவியாக வரப்போகிறவர் என்றோ, அதுபற்றிய கற்பனைகள்/பயங்க(?)ளோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால், எங்கள் இருவருக்கும் திருமணப் பேச்சு தொடங்கியபின், அவரைச் சந்தித்தது பற்றி யோசித்துப் பார்க்கிறேன்.
<br />
<br />அப்போது நான் ஹைதராபாதில். உமா திருச்சி அருகே ஆங்கரை என்ற கிராமத்தில். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தபோது, இந்த விஷயத்தைச் சொல்லி, சம்மதமா என்று கேட்டார்கள்.
<br />
<br />நான் உடனடியாக சம்மதித்துவிடவில்லை. அதற்கான காரணங்களை இங்கே விவரித்தால், ராத்திரிச் சாப்பாடு நிச்சயமில்லை என்பதால், சில நாள் பிடிவாதத்துக்குப்பின், அரைகுறையாக சம்மதித்தேன் என்றுமட்டும் சொல்லிவைக்கிறேன். அதில் ஒரு முக்கியமான நிபந்தனை, 'உமாவை நேரில் பார்த்துக் கொஞ்சம் பேசவேண்டும், அதன்பிறகுதான் முழுமையான சம்மதத்தைச் சொல்வேன்', என்று.
<br />
<br />அதற்காக, நானும், என் அத்தையும், திருச்சிக்குச் சென்றோம். உமா வீட்டிற்குச் சென்று, விபரம் சொல்லி, மாடியிலிருந்த ஒரு தனியறையில் சந்தித்தோம். சுவரில் ஒரு ஓரமாக ரஜினிகாந்த் படம், பக்கத்திலேயே சுவாமி ராகவேந்திரர். சற்றுத் தொலைவில், 'முயற்சிகள் தவறலாம், முயற்சி செய்யத் தவறக்கூடாது', என்றெழுதி, அதைச் சுற்றிலும் ஒரு வண்ணக் கோலம். பக்கத்தில் ஒரு சிறு கதவு திறந்திருக்க, மிச்சமிருந்த மொட்டை மாடியில், கரையான் சகிதம் நிறைய தென்னங்கீற்றுகள்.
<br />
<br />சில நிமிடங்களுக்கு அவற்றையே தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததற்குக் காரணம், கூச்சமோ, வெட்கமோ இல்லை. ராத்திரி முழுக்க கஷ்டப்பட்டு யோசித்து, பேச நினைத்ததெல்லாம் மறந்துபோச்சு.
<br />
<br />முதலில் பேசியது நானா, அவரா என்று நினைவில்லை. ஆனால், நான் கேட்டது ஒரே ஒரு கேள்விதான், 'இந்தக் கல்யாணத்தில உனக்கு முழுச் சம்மதமா ? இல்லை, அப்பா-அம்மா சொன்னதுக்குத் தலையாட்டிட்டியா?'
<br />
<br />'சம்மதம்தான்', என்று உமா சொன்னபோது, அதில் பொய் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆகவே, 'எனக்கும் முழுச் சம்மதம்', என்று அங்கேயே சொல்லிவிட்டேன்.
<br />
<br />அதற்குமேல் பேசுவதற்குள், கீழேயிருந்து, 'சாப்பிட வாங்க', என்று குரல் வந்துவிட்டது. கல்யாணச் சாப்பாடு.</font>
<br />
<br />-o0o-
<br />
<br /><strong>ரவியா</strong>
<br />
<br /><font color="blue">கல்யாணம் காட்சி என்று யோசிக்காத வயதில் தான் என்னவளை பார்த்தேன். அதெல்லாம் "துள்ளித்திரிந்த காலம்" (அ) "துள்ளுவதோ இளமை காலம்" என்று செல்வராகவன் போன்றவர்கள் சொல்லித்தான் தெரியுது. அப்பொழுது என்னவோ ஸ்கூல், டியுஷன், விளையாட்டு என்று நேரம் போவதே தெரியாத காலம். பாண்டியில் நாங்கள் குடியிருக்காத தெருவே கிடையாது என்று சொல்லுமளவிற்கு அடிக்கடி வீடு மாற்றிக் கொண்டிருப்போம். அப்படித் தான் என் பதினாலாவது வயதில் அவள் குடியிருந்த தெருவில் அவள் வீட்டிற்கு எதிர் வீடு பக்கத்தில் தஞ்சமடைந்தோம்.
<br />
<br />உடனே சினிமா ஸ்டைலில் சைட், காதல் என்று கற்பனை பண்ணிக்காதீங்க. பதினாலு வயசுல உங்களுக்கே உங்களை புடிச்சுதா? அதேமாதிரிதான். அரும்பு மீசை. கால்கள் சருமம் தெரிய அரை கால் சட்டை (அப்பவெல்லம் shorts என்று சொல்ல மாட்டாங்க. விசேஷ நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இதே கோலம்தான்.) பெண்களைப் பார்த்தாலே ஒரு வெட்கம். அதிலும் எதிர் வீட்டிலும் அதன் அடுத்த வீட்டிலும் குறும்புடன் புதிதாய் வந்தவனை ‘எடை போடும்’ பெண்கள்.. கேட்கவேண்டுமா? சைக்கிளில் வந்திறங்கி அதை குறட்டில் (ஆலோடி) ஏற்றிவிட்டு வீட்டுக்குள் செல்வதிற்குள் "க்ள்க்.. க்ள்க்" என்று சிரிப்புடன் 3 ஜோடி கண்கள் நோட்டமிடும். (என் மூக்கைப் பார்த்து தான் சிரித்ததாக பிறகு தெரிந்துக்கொண்டேன். நம்ம சுந்தர் மட்டும் மூக்கை நுழைக்காமலிருந்தால் அதேயே என் புனைப் பெயராய் தேர்ந்தெடுத்திருப்பேன்.)
<br />
<br />சில நாட்களில் என் அக்காவும் அவளின் அக்காவும் நண்பிகளாகி வீட்டுக்கு வரப் போக ஒரு நாள் அதிகார பூர்வமான அறிமுகம் நடந்தது. அப்போது தான் நேரில் அருகில் பார்த்தேன். முகத்தில் ஒரு பயம் கலந்த வெட்கம். தோழியர்களுடன் சேர்ந்து இவ்வளவு நாட்கள் என்னை வெறுப்பேற்றியதை எங்கே அவள் அக்காவிடம் சொல்லிவிடப் போகிறேனோ என்றொரு அச்சம். இந்த கோழி முட்டை கண்ணா (இப்பத்திய ஜோ மாதிரி - பழைய ஜெயசுதா மாதிரி) இப்படி என்னை வாட்டியது என்று எனக்கு ஒரே கோபம் கலந்த ஆச்சரியம்.
<br />
<br />அதுவே எங்கள் முதல் சந்திப்பு! -- அக்கினி நட்சத்திர பிரபு-கார்த்திக் ஸ்டைலில்.
<br />
<br />(அப்புறம் பழி வாங்கும் படலங்கள், மோதல்களெல்லாம் இன்னொரு நாள்).
<br />
<br />சில வருடங்களில் மறுபடியும் வீடு மாற்றல். அதே ஊரில்தான். எதிர் வீட்டுப் பையனை பார்க்கப் போகும் சாக்கில் சண்டைகள் தொடர்ந்தது. (அவள் காலேஜுக்கு போகும்போது பின் தொடர்ந்து துணைப் போகும் ரோமியோக்களைப் பற்றிக் கூறி சீண்டுவேன்)
<br />
<br />பிறகு வெளி நாட்டிலிருக்கும் அவளின் அக்கா அவளை அவரிடம் அழைத்துக் கொண்டார். மூன்று வருடம் கழிந்தது. நானும் அதே நாட்டிற்கு செல்லும் நாள் வந்தது. *மரியாதை நிமித்தம்* அவளின் அம்மாவிடம் விடைபெறச் சென்றேன். சில சிறிய பொருள்களை அவரின் மகளுக்கு எடுத்துச்செல்ல முடியுமா என்று கேட்டார். சரியென்றேன். நிச்சயம் விலாசம் கிடைக்குமே. இப்போது நினைத்துப் பார்க்கையில் உண்மையிலேயே *மரியாதை நிமித்தம் தான்* அவரைப் பார்க்க சென்றேனா என்று சரியாகத் தெரியவில்லை. :))
<br />
<br />கைவசம் தொலைபேசி எண் இல்லை. டைரெக்டரியில் தேடவும் தோன்றவில்லை, முன் அறிவிப்பில்லாமல் ஒருவர் வீட்டிற்கு நேரில் செல்வது (ஐரோப்பில்) மரியாதையில்லை என்றும் தெரியாது. ஒரு நாள் ஞயிற்றுக் கிழமை நேரில் சென்று காலிங் பெல்லினேன். கதவை திறந்த அவளின் சகோதரிக்கு ஒரே திகைப்பு. பொடியனாக பார்த்திருந்த என்னை இப்போழுது அடையாளம் தெரியவில்லை. நான் என்னை அறிமுகப் படுத்திக் கொள்வதற்குள் கதவின் வழியே ஒரு ஜோடி கண்கள் ஆச்சரியமாக விரிந்தது.
<br />
<br />"நம்ம ரவிதான்" என்று ஒரு குரல். அந்த "நம்ம" எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. உள்ளே சென்றவுடன் ஒரே அதிர்ச்சி. "பொம்பள தனுஷா" இருந்தவள் ஒல்லிப்பிச்சான் "ஜோதிகா" வாக மாறியிருந்தாள். கோழிமுட்டை கண்கள் முகம் பெருத்திருந்ததால் சிறுத்திருந்தது. பாரம்பரிய வழக்கமான அறிமுகத்திற்குப் பின் பேசிக்கொண்டிருக்கையில் கண்களில் ஒரு கம்ப்லிசிட்டி (complicity) தெரிந்தது. வீட்டில் ஸீரியசாக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருப்பதாக அவளின் சகோதரி சொல்லும் போது முகத்தில் ஒரு வெட்கம். நாள் முழுதும் தனியே பேச சந்தர்ப்பம் கிடைக்காவிடினும் கண்களாலும் பல விஷயங்கள் புரிய வைத்தாள்.
<br />
<br />அந் நாட்டைப் பொருத்தவரை என்னைவிட சீனியர் என்ற ஒரு பெருமை, அக் காரணத்தினாலேயே அந்நாட்டு சம்பரதாயங்கள் கடைப்பிடிப்பதில் (போஜன மேசை விதிகள்) எதாவது தவறு செய்து விடுவேனோ என்ற பயம் கலந்த அனுசரணை. நண்பனை காப்பாற்ற கண்களாலேயே எச்சரிக்கை. சிறு வயதில் பார்த்த அசட்டு நண்பன் மேல்படிப்பிற்காக வெளி நாட்டிற்கு வந்திருப்பதில் ஒரு பெருமை. ஒன்றும் பேசாமலேயே!
<br />
<br />அதுவே எங்கள் முதல் சந்திப்பு! -- ஆட்டோகிராப் சேரன்-ஸ்னேகா ஸ்டைலில்.
<br />
<br />அவளின் அக்கா - மாமாவிற்கு என்னை மிகவும் பிடித்துப் போயிற்று. என்னை யாருக்கு தான் பிடிக்காது? (இப்பொழுது கேட்டால் "சரியான காக்கா" என்பாள்) என்னை குடும்ப நண்பனாக பாவித்து அனைத்து வீட்டு விசேஷங்களுக்கும் அழைப்பார்கள். (ஒரு வேளை போட்டோ பிடிக்க ஆள் தேவைப்பட்டதால் இருக்கலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது.) அச்சந்தர்பங்களில் கல்யாண வயதை எட்டிப்பார்க்கும் பெண்களின் பெற்றோர்கள் என்னைப் பற்றி "விசாரித்ததாக" பிறகு என்னிடம் சொல்லும் போது கண்களில் தெரிந்தது பெருமை கலந்த பொறமையா? . இப்படியாக 2 வருடம் கழிந்தது. இடையில் இந்தியா சென்றபோது கல்யாண தரகர் வேலை வேறு.
<br />
<br />கட்டாய ராணுவச் சேவைக்காக ஒரு வருடம் ராணுவத்தில் இருந்த பொழுது தான் கடிதப் பரிமாற்றம் தொடங்கியது. சில நாட்களில் குடும்ப காரணங்களுக்காக ஐரோப்பாவில் வேறோரு நாட்டில் அவளும் தங்க நேர்ந்தது. அந்த Autumn-ல் தான் எங்கள் நட்பு ஆட்டம் கண்டது. ஐரோப்பாவில் கோடைக் காலம் முடிந்து Autumn வரும் போது சிலர் மன உளைச்சல்களுக்கு ஆளாவது உண்டு. தனிமையில் இருந்த இருவருக்கும் இந்த முன் குளிர்காலத்தில் எங்கள் கடிதங்களே ஒரே ஆறுதல். ஒருவருக்கொருவர் கடிதங்களிலேயே ஆறுதல் சொல்லப் போய் அவைகளின் சாரமே மாறிவிட்டது. எப்படி? எப்போது? என்றுதான் தெரியவில்லை. ஆனால் எங்கள் 'நட்பு' இறந்துவிட்டது என்று இருவருக்குமே தெரிந்திருந்தும் 'எந்தக் கட்டத்தை' அடைந்துள்ளது என்று எங்களுக்கே தெரியவில்லை.
<br />
<br />டிசம்பர் லீவில் சந்திப்பதாக முடிவு. அந்த 'நன்னாளும்' வந்தது (The ‘D’ Day). நான் சென்ற நேரம் வீட்டில் யாருமில்லை. கதவை திறந்தவளை எனக்கு அடையாளம் தெரியவில்லை. அவள் என் பால்ய தோழியே இல்லை. அந்த கண்களில் தெரிந்தது வெட்கமா? பயமா? மகிழ்ச்சியா? ஒரு வார்த்தை கூட பேசாமல் இருவருக்கும் நட்பை தாண்டி எந்தக் கட்டத்தை அடைந்திருக்கிறோம் என்று புரிந்தது.
<br />
<br />அதுவே எங்கள் முதல் சந்திப்பு! -- கமல் பட ஸ்டைலில். :grin:
<br />
<br />பி;கு : இப்போழுது என் (எங்களின்) பழைய கடிதங்களைப் படித்துவிட்டு "நாம் தோழர்களாகவே இருந்திருக்கலாம்" என்று அவள் சொல்லும் போது என் நமட்டு சிரிப்பே பதில்... நான், என்னை சீண்டுவதற்காகத் தான் இப்படிச் சொல்லுகிறாள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?</font>
<br />
<br />-o0o-
<br />
<br /><strong>சர்வே முடிவு</strong>
<br />
<br />சர்வேன்னு ஒண்ணு நடத்தினா அதுக்கு முடிவுன்னு ஒண்ணு சொல்லணும்-னு ஒரு எழுதப்படாத விதி இருக்குங்க.
<br />
<br />எட்டு பேர் எங்களுக்கு பதில் அனுப்பினாங்க. படிச்சுப் பார்க்கும் போது ஒவ்வொருத்தரும் அவங்களால முடிஞ்ச ரேஞ்சுக்கு பில்டப்பு குடுத்திருக்காங்க. வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அனுபவங்கள். ஆனா அந்த பில்டப்பையெல்லாம் நீக்கிட்டு உள்ள பார்த்தா.. ஏதோ இருக்குங்க. "இந்தப் பொண்ணு தான் நமக்கு"-ன்னு உள்ள ஒரு பல்பு எரியுதுன்னு தெரியுதுங்க.
<br />
<br />அதனால சர்வே முடிவாக என்ன சொல்றோம்னா, அந்த பல்பை நீங்க நோட்டம் விட்டுக்கிட்டே இருங்க. யாரைப் பார்க்கும் போது பல்பு எரியுதோ, அவங்க தான் உங்களோட 'அவங்க.' அந்த பல்பு எரிஞ்சா தான் ஒளிமயமான வாழ்க்கை. புரியுதுங்களா?
<br />
<br />அடுத்த சர்வேயில இதே மாதிரி சுவாரஸ்யமான கேள்வி மற்றும் அதை விட சுவையான பதில்களோட சந்திப்போம். அது வரைக்கும் ஜூட் விட்டுக்குறோம்ங்க.மீனாக்ஸ் | Meenakshttp://www.blogger.com/profile/14059186829417774107noreply@blogger.com13